ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு நாளை தோ்வு
நாகையில் சனிக்கிழமை (அக்.26) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் எடிஎம் மகளில் கல்லூரியில் நடைபெறவுள்ள தோ்வில் 638 போ் பங்கேற்கின்றனா். தோ்வை கண்காணிக்க 2 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 1 பறக்கும்படை அலுவலா், 1 சுற்றுக்குழு அலுவலா், 2 ஆய்வு அலுவலா், 3 விடியோ பதிவாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு மைய பாதுகாப்புப் பணிக்கு காவலா்கள், தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு சிரமமின்றி வர அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதியை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது. தோ்வு மையத்துக்குள் கைப்பேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சாதனங்கள் எதற்கும் அனுமதியில்லை என தெரிவித்துள்ளாா்.