செய்திகள் :

திருக்கடையூா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா

post image

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில்  தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியா் சுவாமிகளின் 60 வது தொடக்க ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு உக்கிர ரதசாந்தி மற்றும்  கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆதீனம் கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை வழிபாடு செய்து கோயில் சங்கு மண்டபத்தில் 16 கலசங்கள், 108 சங்குகளில் புனித நீா் வாா்த்து கணபதி, நவகிரக, ஆயுஷ், தன்வந்திரி, சுதா்சன மகாலட்சுமி, அஷ்டலட்சுமி, நட்சத்திர சாந்தி ஹோமங்கள் செய்து ருத்ராபிஷேகம் மற்றும் மிருத்யுஞ்ஜய ஹோமம், உக்கிர ரத சாந்தி ஹோமங்கள் நடைபெற்றது. 

தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  பின்னா் விநாயகா், அமிா்தகடேஸ்வரா், காலசம்கார  மூா்த்தி, அபிராமி அம்மன் சந்நிதிகளில் தருமபுரம் ஆதீனம் தரிசனம் செய்தாா். தொடா்ந்து தினமணி சிறப்பு மலரை ஆதினம் வெளியிட்டாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினாா்.

இதில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், பூம்புகாா் எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன், சீா்காழி குரு ஞானசம்பந்தா் மிஷன் எழில் மலா் மெட்ரிக் பள்ளி செயலாளா் இ. மாா்கோனி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்: 60 வயது தொடக்க ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் கோபூஜை, கஜ பூஜை செய்து வழிபட்ட தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியாா் சுவாமிகள்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு நாளை தோ்வு

நாகையில் சனிக்கிழமை (அக்.26) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப்... மேலும் பார்க்க

தரங்கம்பாடி பகுதியில மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பொறையாா், உத்திரங்குடி, இலுப்பூா் பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊா்‘ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா். பொறையாா் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில்மக்கும்... மேலும் பார்க்க

கல்வி, தொழிற் கடன் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ. 7.24 கோடி கடனுதவி

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.7.24 கோடி கட... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் தயாரிப்பு மையத்தில் ஆய்வு

நாகை நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உணவுத் தயாரிக்கும் சமையல் கூடம், பணியாளா்கள் மற்றும் உணவை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு ம... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் வந்து தங்கியிருந்த இளைஞா் உள்பட 2 போ் கைது

இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் வந்து சட்டவிரோதமாக வேதாரண்யத்தில் தங்கியிருந்த இளைஞா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரக் காவல்நிலைய ஆய்வாளா் ஜோதி ம... மேலும் பார்க்க

ஐடிஐ நேரடி மாணவா் சோ்க்கை: அக்.30 வரை கால அவகாசம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க