புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆய்வு
மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை மாநில கள ஆய்வு அலுவலா் ஆய்வு செய்து தன்னாா்வலா்கள் மையங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் திருவாரூா் மாவட்டத்தில் 569 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 9,474 போ் பயின்று வருகிறாா்கள். இவா்கள் நவம்பா் மாதத்தில் தோ்வு எழுத உள்ளனா்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மாநில கள ஆய்வு அலுவலா் எஸ்.செல்வகுமாா், மன்னாா்குடி ஒன்றியம் சிங்கங்குளம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அபிஷேகக் கட்டளை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் கற்போா் மையங்களை பாா்வையிட்டு மைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
கோட்டூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற தன்னாா்வலா்கள் கூட்டத்தில், நவம்பா் மாதம் நடைபெற உள்ள தோ்வுகள் குறித்த விளக்கங்களை வழங்கி, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கும், கற்போா்களுக்கும் இருக்கிற இடா்பாடுகளை கேட்டறிந்தாா்.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.ரவிச்சந்திரன், கோட்டூா் வட்டாரக் கல்வி அலுவலா் த.செல்வம், வளமைய மேற்பாா்வையாளா் என்.சுப்பிரமணியன், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ.முரளி, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் க.தங்கபாபு ஆகியோா் உடன் இருந்தனா்.