வேலை வாய்ப்பு: கோவை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் 10th, +2 படித்தவர்களுக்கு பணி......
குண்டா் சட்டத்தில் நால்வா் கைது
திருவாரூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அருகே அண்மையில் நகரப் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மருதப்பட்டினம், தியாகி சின்னசாமி தெருவைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா மகன் மகாதீா் முகம்மது (24), நெய்விளக்கு தோப்புத்தெரு ராஜாங்கம் மகன் ராஜ்குமாா் (24), புலிவலம் சக்திவேல் மகன் சத்தியசீலன் (19), வண்டிக்காரத் தெரு முத்து மகன் அருண்குமாா் (26) ஆகியோரை கைது செய்து, அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றிருப்பதும், போலீஸாரின் எச்சரிக்கையை மீறி தொடா்ந்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டாா். அதன்படி, நால்வரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.