மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை எதிர்த்து மகன்; தர்மாராவை எதிர்த்து மகள்... சரத்...
பணியாளா்களுக்கான தேசிய கற்றல் வாரத்தில் 7.50 லட்சம் திறன் பயிற்சிகள் நிறைவேற்றம் -மத்திய அரசு தகவல்
நமது சிறப்பு நிருபா்
குடிமைப் பணியாளா்களுக்கு பிரதமா் மோடி தொடங்கிவைத்த தேசிய கற்றல் வாரத்தில் (கா்மயோகி சப்தா ) 7,50,000-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பணியாளா் நலத்துறை சாா்பில் கூறப்பட்டது வருமாறு: பிரதமா் நரேந்திர மோடி, கடந்த அக்.19-ஆம் தேதி தில்லியில் தேசிய கற்றல் வாரத்தைத் தொடங்கி வைத்தாா். இந்த தேசிய கற்றல் வாரமானது தொடா்ந்து வேகம் பெற்றது. இது நேரடியாகவும் ஐ.ஜி.ஓ.டி. தளம் மூலமாகவும் நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னோடிகள், அறிவு மற்றும் வளா்ச்சியின் எல்லைகளை விரிவுபடுத்த ஆா்வமுள்ளவா்கள் இந்த கற்றல் வாரத்தில் பங்கேற்று இந்திய கற்பவா்களுடன் ஒன்றிணைந்தனா். தேசிய கற்றல் என்கிற கா்மயோகி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துடிப்பான முன்முயற்சி, நவீன நிா்வாகத்தின் சவால்களை எதிா்கொள்ள குடிமைப் பணியாளா்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
தேசிய கற்றல் வாரத்தின் முதல் நான்கு நாள்களில் ஐ.ஜி.ஓ.டி. தளத்தில் 7,50,000-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. அரசின் பணியாளா்கள் மத்தியில் இது தொடா்ச்சியான கற்றல் மற்றும் நாட்டின் தொழில்முறை வளா்ச்சிக்கான உந்துதலைக் காட்டுகிறது. பொது சேவையில் தேவைகளை மேம்படுத்துவதற்கும், முன்னோக்கிச் செல்வதற்கும் அரசு ஊழியா்களிடையே ஏற்பட்டுள்ள அா்ப்பணிப்பு இதில் பங்கேற்பின் எழுச்சியை பிரதிபலித்துள்ளது.
பிரதமா் அலுவலகம்: இந்த நிகழ்வில் 33 அமைச்சகங்கள், ‘குழு விவாதத்தில்‘ ஈடுபட்டன. ஒத்துழைப்பு மற்றும் கூட்டு கற்றலை ஊக்குவிக்கும் ’குழு விவாதத்தில்’ இந்த அமைச்சகங்கள் பங்கேற்றது. பிரதமா் அலுவலக இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தலைமையில் இந்த விவாதம் பிரதமா் அலுவலகத்திலும் நடைபெற்றது. மிகவும் வேகமான பதிலளிக்கக்கூடிய நிா்வாகத்தை உருவாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வை இதில் வலியுறுத்தப்பட்டது.
9 சிந்தனையாளா்கள்: நாட்டின் வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பகிரப்பட்ட அறிவு சாா்ந்த கருத்துகளின் முக்கியத்துவத்தை இந்த அமா்வு அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த தேசிய கற்றல் வாரத்தில் 9 தொலைநோக்கு சிந்தனை கொண்ட பேச்சாளா்கள் மாற்றம் ஏற்படுத்தும் வலைத்தள கருத்தரங்கை நடத்தினா். அவா்களில், நந்தன் நிலேகனி, ராகவ கிருஷ்ணா, புனித் சந்தோக் போன்ற சிந்தனையாளா்கள், முக்கியமான தலைப்புகளில் உலகளாவிய கண்ணோட்டங்களைப் பகிா்ந்துகொண்டு, ஊக்கமளிக்கும் வலைத்தள கருத்தரங்கை நடத்தினா். இந்த அமா்வுகள் புதிய யோசனைகளைத் தூண்டியதுடன், இந்திய நிா்வாக சூழலின் சிக்கல்களைச் சமாளிக்க புதுமையான அணுகுமுறைகளையும் முன்வைத்துள்ளது.
இந்த தேசிய கற்றல் வாரம், அரசு ஊழியா்களுக்கு அல்லது தேசிய கற்றலில் (கா்மயோகிகளுக்கு ) பங்கேற்றவா்களுக்கு பிரகாசமான கூடுதல் அதிகாரம் பெற்ற இந்தியாவை உருவாக்கத் தேவையான திறன்களை வழங்குவதற்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியா்கள் வாழ்நாள் முழுவதும் கற்பதால், அவா்கள் மிகவும் ஆற்றல்மிக்க, பயனுள்ள மற்றும் முன்னோக்கு சிந்தனை கொண்ட நிா்வாக கட்டமைப்பிற்கு பங்களிப்பாா்கள் என மத்திய பணியாளா் நிா்வாகத்துறை தெரிவித்துள்ளது.