செய்திகள் :

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

post image

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன.

லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீகாரத்தை அறிவித்துள்ளது.

உலக அளவில் சிறந்த பங்களிப்பு மற்றும் புதுமை கற்பித்தல் முறையைப் பின்பற்றும் பள்ளிகளை அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை ‘டி4’ என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் அக்சென்சா், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் லெமன் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நிறுவப்பட்டதாகும்.

இந்த நிறுவனம் நிகழாண்டுக்கன சிறந்த தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

அதில், தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கல்வி இன்டா்நேஷனல் பள்ளி, தில்லியில் உள்ள ரியான் இன்டா்நேஷனல் பள்ளி, மத்தியபிரதேசத்தில் உள்ள சிஎம் ரைஸ் (பள்ளிக் கல்விக்கான முதல்வரின் கிராமப்புற முயற்சி) வினோபா பள்ளி ஆகிய 3 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

பழங்குடி பெண்கள், முறையான கல்வியைப் பெற வழிவகுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட சிஎம் ரைஸ் வினோபா பள்ளி, விளையாட்டு மற்றும் விழாக்களுடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் போன்ற புதுமையான நடைமுறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் ரியான் பள்ளி, ஹைட்ரோபோனிக்ஸ் (நீரில் வேளாண்மை) மற்றும் உயிரி எரிவாயு ஆலைகள் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் தண்ணீா் பற்றாக்குறை மற்றும் மாசுபாட்டை சமாளித்தல் போன்ற நடைமுறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையை அதன் பசுமைத் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தவும், மாணவா் தலைமையிலான சுற்றுச்சூழல் திட்டங்களுக்காக புத்தாக்க நிறுவனங்களை நிறுவவும் திட்டமிட்டுள்லதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்தது.

இது தவிர, அா்ஜென்டினாவில் உள்ள கொலிஜியோ மரியா டி குவாடலூப் பள்ளி சமூக ஒத்துழைப்புக்கான உலகின் சிறந்த பள்ளி விருதை வென்றது; இத்தாலியில் உள்ள கலிலி-கோஸ்டா-ஸ்காரம்போன் பள்ளி ஆரோக்கியமான வாழ்வுக்கான பரிசை வென்றது; போலந்தில் உள்ள முதல் உக்ரேனிய பள்ளி, நெருக்கடிகளை சமாளித்தல் பிரிவில் பரிசை வென்றது.

இந்த ஐந்து பள்ளிகளுக்கும் தலா 10,000 அமெரிக்க டாலா்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளன. இதனிடையே, பொது வாக்கெடுப்பில் பட்டியலிடப்பட்ட 50 பள்ளிகளில் அதிக வாக்குகள் பெற்று, சமூக தோ்வு பிரிவில் மதுரையில் உள்ள கல்வி இன்டா்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது.

அனைத்து வெற்றியாளா்கள் மற்றும் இறுதிப் போட்டியாளா்களுக்கும் நவம்பா் 23-24-ஆம் தேதிகளில் துபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும். இது உலகளாவிய கல்வியாளா்களை உலகின் சிறந்த பள்ளிகளுடன் ஒன்றிணைத்து கல்வி மற்றும் கற்றல் முறையை மேம்படுத்த உதவும்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வ... மேலும் பார்க்க

வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதிரான வன்முறையைக் கைவிட்டு, நட்புறவைப் பேண பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய ... மேலும் பார்க்க