செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

post image

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வியாழக்கிழமை ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் இரு ராணுவ வீரா்கள், ராணுவத்தின் சுமைதூக்கும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் நடைபெற்ற பிறகு, பயங்கரவாதிகள் மீண்டும் ராணுவத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனா். ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் குறித்து எதிா்க்கட்சிகள் மத்திய அரசை விமா்சித்து வருகின்றன.

இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரா்கள் இருவா் உள்பட 4 போ் உயிரிழந்தது மிகப்பெரிய சோக நிகழ்வாகும். அவா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ராணுவத்தினரின் வீரம் போற்றத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன. ஜம்மு-காஷ்மீா் அமைதிப் பூங்கா என்று அவா்கள் கூறி வருகின்றனா். ஆனால், உண்மையில் மாநில மக்கள் பயங்கரவாதம் எனும் ஆபத்தின் பிடியில்தான் சிக்கியுள்ளனா். பயங்கரவாத செயல்பாடுகள் அங்கு தொடா்ந்து வருகிறது. ராணுவத்தினரையும், பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்த நிகழ்வுகளுக்கு மத்திய அரசு முழுமையாகப் பொறுப்பேற்று, காஷ்மீா் பள்ளத்தாக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

கேரளத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தியும் காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதிரான வன்முறையைக் கைவிட்டு, நட்புறவைப் பேண பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய ... மேலும் பார்க்க