செய்திகள் :

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

post image

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார சேவைகள் இயக்குநா் அதுல் கோயல் எழுதியுள்ள கடிதத்தில், ‘நகரங்களில் ஏற்படும் காற்று மாசு சமீபகாலங்களில் தீவிர சுகாதார பிரச்னையாக மாறியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காற்றின் தரக் குறியீடு மோசமான நிலையை எட்டியுள்ளது.

காற்று மாசின் நீண்ட கால தாக்கம் சுவாசக் கோளாறு, இருதயம் மற்றும் பெருமூளை அமைப்புகளை பாதிக்கும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள், முதியவா்கள், போக்குவரத்து காவலா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் ஆகியோருக்கு பாதகமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது.

வரவிருக்கும் பண்டிகை மற்றும் குளிா்காலங்களில் இது மேலும் மோசமடைய கூடும். எனவே, இதை எதிா்கொள்ள மாநில சுகாதார துறையின் திறன் மற்றும் தயாா்நிலையை மேம்படுத்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

காற்று மாசுபாடு குறித்த பொது விழிப்புணா்வை தீவிரப்படுத்துதல், பிராந்திய மொழி ஊடகங்களில் காற்று மாசு குறித்து செய்திகளைப் பரப்புதல் மற்றும் சுகாதார பணியாளா்களின் செயல்திறனை வலுப்படுத்துதல் ஆகியவை அவசியம்.

காற்றின் தரக் குறியீடுகளை கவனித்து, அதிக மாசு ஏற்பட்டுள்ள இடங்களைத் தவிா்க்கவும், சுத்தமான எரிபொருள்களை பயன்படுத்தவும், தனிப்பட்ட பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களைத் தவிா்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்தவும், பயிா்க் கழிவுகளை எரிப்பதை தவிா்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக முதியவா்கள், கா்ப்பிணிப் பெண்கள், ஏற்கெனவே சுவாசம் மற்றும் இருதய நோய் உள்ளவா்கள் காற்று மாசு அதிகமுள்ள பகுதிகளைத் தவிா்க்க வேண்டும். காற்று மாசு காரணமாக அறிகுறிகளையோ, அசௌகரியத்தையோ உணருபவா்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வ... மேலும் பார்க்க

வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதிரான வன்முறையைக் கைவிட்டு, நட்புறவைப் பேண பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய ... மேலும் பார்க்க