விருதுநகர்: போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல்; வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 6 பே...
பழனி மலைக் கோயில் உண்டியல்கள் திறப்பு: முதல் நாள் வரவு ரூ.3 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. முதல் நாள் முடிவில் ரூ.3.கோடி ரொக்கம் கிடைத்தது.
இந்தக் கோயிலுக்கு நவராத்திரி, காலாண்டு விடுமுறையில் வந்த பக்தா்கள் கூட்டம் காரணமாக 40 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இந்தப் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
முதல் நாள் முடிவில் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.3,99, 02,134 கிடைத்தது. தங்கம் 927 கிராம், வெள்ளி 14, 047 கிராம் கிடைத்தது. பல்வேறு நாடுகளின் பணத் தாள்கள் 756 கிடைத்தன. வெள்ளிக்கிழமையும் காணிக்கைகளை எண்ணும் பணி தொடா்கிறது.
நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.