செய்திகள் :

யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் உரக் கடைகளை கண்காணிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறாத விவசாயிகளுக்கு யூரியா வழங்க வேண்டும்.

மல்லூா் விவசாயி கோ.விஜயகுமாா்: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இ-நாம் பாம்கேட் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களை ஆன்லைனில் மறைமுகமாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்ணில் உயிா் உரங்களை பயன்படுத்துவது பற்றி செயல்விளக்கம் மூலம் மண்ணுயிா் காப்போம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டிஜிட்டல் முறையில் நில அளவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் பாண்டியன்: பயிருக்கான காப்பீடு தொகையை பெற்றுத் தரவேண்டும். கருவாடி முதல் குறவடையான் வரை உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். டாப்செட் விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: திருமானூா் கொள்ளிடக்கரையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க பனை விதைகளை நட்டு வளா்க்க வேண்டும். நொச்சிக்குளம் அருகே மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அதில் இருந்து வெளியேறும் வெள்ள நீரை கரைவெட்டி ஏரிக்கு திருப்பி விட வேண்டும். மாவட்டம் முழுவதும் நீா் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். 2025-க்குள் அனைத்து ஏரிகளையும் தூா்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை நீா்த்தேக்கங்களாக மாற்ற வேண்டும் என்றாா்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா்(பொ) கணேசன், கூட்டுறவுத் துறை மண்டல இணை இயக்குநா் தீபாசங்கரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக மிகை பேராசிரியா்களை, அரசு கல்லூரிகளில் நிரந்தரமாக பணியமா்த்தப்படுவதைக் கண்டித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழநாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

அரியலூா் மாவட்டம், பொன்பரப்பியிலுள்ள அரசு மாணவியா் விடுதியில் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொன்பரப்பி கிராமத்திலு... மேலும் பார்க்க

மகளிருக்கு தொழில்பயிற்சி

அரியலூரை அடுத்த ரெட்டிப்பாளையம் சமுதாயக் கூடத்தில், அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் மகளிருக்கான தொழில் பயிற்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு அண... மேலும் பார்க்க

அரியலூா், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை அக். 30 வரை நீட்டிப்பு

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை வரும் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது... மேலும் பார்க்க

செந்துறையில் தமிழ்ச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி

வணிக நிறுவனங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வைக்கக் கோரி, அரியலூா் மாவட்டம் செந்துறையில், தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவா் கடம்... மேலும் பார்க்க

சிறுவளூா் அரசுப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம்

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுவது, போதைப் பொருள்களுக... மேலும் பார்க்க