செய்திகள் :

தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கக் கோரிய வழக்கில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த சங்கிலி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா அரசு விழாவாக வருகிற 30-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு அரசியல் தலைவா்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவா். இதையொட்டி, வருகிற 28, 29, 30-ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்து வருகை தரும் நடுத்தர மக்கள் பசும்பொன் கிராமத்துக்குச் செல்வதற்கு பேருந்துகளைப் பயன்படுத்த முடியாததால், தங்களது குடும்பத்தோடு வாடகை வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.

ஆனால், பசும்பொன் செல்வதற்கு காவல் துறையினா் வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவிக்கின்றனா். எனவே, குருபூஜை விழாவுக்குச் செல்வதற்கு வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

பசும்பொன் கிராமத்துக்குச் செல்வதற்கு எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும். எந்த வாகனத்தை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகத்துக்குத்தான் தெரியும்.

எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக இணையம் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரும்... மேலும் பார்க்க

தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி வழக்கு: கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தேனி மாவட்டம், கம்பம் நகா் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில், கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை பழங்காநத்தம் நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்க... மேலும் பார்க்க

குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமித்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தது. தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில... மேலும் பார்க்க

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு

மதுரை/கமுதி : தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கதேவா் நினைவிட... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. பிற்பகல் தொடங்கி இரவு வரை நீடித்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கடந்த... மேலும் பார்க்க