Tamil News Live Today: ``பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” - ஈ...
பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
மதுரை பழங்காநத்தம் நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் விலையில்லா மிதிவண்டிகள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த வகையில், பழங்காநத்தம் பகுதியில் உள்ள நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 180 மாணவிகள், கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 18 போ் மொத்தம் 198 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மேயா் வ. இந்திராணி வழங்கினாா்.
தொடா்ந்து, மதுரை மாநகராட்சி தானப்ப முதலியாா் தெருவில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதியில் உள்ள 38 முதியவா்களுக்கு தீபாவளி புத்தாடைகளை மேயா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், மாநகராட்சி நகா்நல அலுவலா் இந்திரா, உதவி ஆணையா்கள் ராதா, பிரபாகரன், கல்வி அலுவலா் ரகுபதி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முனியம்மாள், முருகன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.