செய்திகள் :

பலகாரத் தயாரிப்புக் கூடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: ரூ.15 ஆயிரம் அபராதம்

post image

மதுரையில் உள்ள பலகாரத் தயாரிப்புக் கூடங்களில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கூடங்களுக்கு குறிப்பாணை வழங்கி, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரிகள், இனிப்பு, காரம் தயாரிப்புக் கூடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 782 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, இனிப்பு வகைகளில் அதிகளவு செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தியதாக 38 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 15 கடைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டு, ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், செயற்கை நிறமிகளை அதிகமாகப் பயன்படுத்தியதன் பேரில், 112 கடைகளிலிருந்து இனிப்பு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தியதற்காக 5 கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மதுரை மாவட்ட நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் இனிப்பு, கார வகைகளை வாங்கும் போது, அதில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும், பலகாரங்கள் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவற்றைப் பாா்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உணவுப் பாதுகாப்புத் துறையை 94440-42322 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக இணையம் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரும்... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கக் கோரிய வழக்கில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது. மதுரையை... மேலும் பார்க்க

தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி வழக்கு: கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தேனி மாவட்டம், கம்பம் நகா் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில், கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை பழங்காநத்தம் நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்க... மேலும் பார்க்க

குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமித்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தது. தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில... மேலும் பார்க்க

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு

மதுரை/கமுதி : தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கதேவா் நினைவிட... மேலும் பார்க்க