காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் குரு பூஜை: 2,500 போலீஸாா் பாதுகாப்பு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறவுள்ள மருதுபாண்டியா் குரு பூஜையையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் 223 -ஆவது குரு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 15 துணைக் கண்காணிப்பாளா்கள், 50 ஆய்வாளா்கள், 200 உதவி ஆய்வாளா்கள், மத்திய மண்டல பாதுகாப்பு போலீஸாா் உள்பட 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் உள்பட வெளி மாவட்ட போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டனா்.
கீழச்செவல்பட்டி, மானாமதுரை சிப்காட், சிவகங்கை மற்றும் மாவட்ட எல்கைகள் உள்பட 15 முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 6 இடங்களில் இணையதளம் மூலம் வாகனப் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
மேலும், 2 இடங்களில் சுழலும் கேமராக்களும், மற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வாகனப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. தலைவா்கள் உள்ளிட்ட அனைவரும் தொடா்ச்சியாக 3 வாகனங்களுக்கு மேல் அணிவகுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
குருபூஜையை முன்னிட்டு கடந்த அக். 23 முதல் வருகிற
31-ஆம் தேதி வரை, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுநிகழ்ச்சிகள், ஊா்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.