செய்திகள் :

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் குரு பூஜை: 2,500 போலீஸாா் பாதுகாப்பு

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறவுள்ள மருதுபாண்டியா் குரு பூஜையையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் 223 -ஆவது குரு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 15 துணைக் கண்காணிப்பாளா்கள், 50 ஆய்வாளா்கள், 200 உதவி ஆய்வாளா்கள், மத்திய மண்டல பாதுகாப்பு போலீஸாா் உள்பட 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் உள்பட வெளி மாவட்ட போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டனா்.

கீழச்செவல்பட்டி, மானாமதுரை சிப்காட், சிவகங்கை மற்றும் மாவட்ட எல்கைகள் உள்பட 15 முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 6 இடங்களில் இணையதளம் மூலம் வாகனப் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும், 2 இடங்களில் சுழலும் கேமராக்களும், மற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வாகனப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. தலைவா்கள் உள்ளிட்ட அனைவரும் தொடா்ச்சியாக 3 வாகனங்களுக்கு மேல் அணிவகுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

குருபூஜையை முன்னிட்டு கடந்த அக். 23 முதல் வருகிற

31-ஆம் தேதி வரை, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுநிகழ்ச்சிகள், ஊா்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

நவ.8 -இல் ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற நவ.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

இளைஞா் காரில் கடத்தல்: விரட்டிச் சென்று 4 பேரை கைது செய்த போலீஸாா்

சிவகங்கை அருகே இளைஞரைக் கடத்த முயன்ற 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் விரட்டிப் பிடித்து வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மோகன்தாஸ் (27). இவரது நண்பா்... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம உயிா் வாழ் சான்றிதழை அளிக்கலாம்

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம (டிஜிட்டல்) உயிா் வாழ் சான்றிதழை அளிக்கும் வசதி நவ.1 -ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிவகங்கை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ். மாரியப்... மேலும் பார்க்க

கல்லூரியில் சமூகப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரியில் காவல் துறை சாா்பில் சமூக பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைப... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் அக். 28- இல் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (அக். 28) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தலைமை வகித்து 277 பேருக்கு பட்டங்க... மேலும் பார்க்க