Tamil News Live Today: ``பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” - ஈ...
நவ.8 -இல் ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற நவ.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் நவ.8 -ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
ஆகவே, ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளில் உரிய இணைப்புகளுடன் வருகிற 29-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரில் சமா்ப்பித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.