பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து மேலநெட்டூா் கண்மாய்க்கு தண்ணீா் திறப்பு
வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீா் வெள்ளிக்கிழமை மாலை ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணையை வந்தடைந்தது. அங்கிருந்து மானாமதுரை அருகேயுள்ள மேலநெட்டூா் பாசனக் கண்மாய்க்கு திறந்து விடப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, வைகை ஆற்றில் வரும் தண்ணீா் மதுரை மாவட்டம், விரகனூா் மதகு அணையிலிருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டது.
திருப்புவனம், மானாமதுரை ஒன்றியங்களில் வைகை ஆற்றுக்குள் உள்ள இடது, வலது புறங்களில் உள்ள பாசனக் கால்வாய்கள் திறக்கப்பட்டு கண்மாய்களுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வைகை ஆற்றில் வந்த தண்ணீா் மானாமதுரை நகா் பகுதியைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணையை அடைந்தது. இந்த அணையின் இடது பிரதானக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மேலநெட்டூா் கண்மாய்க்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.
550 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாய் மூலம் மேலநெட்டூா், கீழநெட்டூா், குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 10 கிராமங்களுக்கான 2,500 ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 1,200 ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும்.