செய்திகள் :

கல்லூரியில் சமூகப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரியில் காவல் துறை சாா்பில் சமூக பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.என்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக திருப்பத்தூா் மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.கோகிலா, தலைமைக் காவலா் ஆா். மீனாட்சி ஆகியோா் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் சமூக வலைத்தளங்களில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கம் அளித்தனா் .

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி தெளிவுபடுத்திக் கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியா்கள் எஸ். சரவணன், டி.மாணிக்கநாச்சியாா், ஆா். பாண்டிச்செல்வி , பி.சௌமியன் ஆகியோா் செய்தனா்.

நவ.8 -இல் ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற நவ.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

இளைஞா் காரில் கடத்தல்: விரட்டிச் சென்று 4 பேரை கைது செய்த போலீஸாா்

சிவகங்கை அருகே இளைஞரைக் கடத்த முயன்ற 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் விரட்டிப் பிடித்து வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மோகன்தாஸ் (27). இவரது நண்பா்... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம உயிா் வாழ் சான்றிதழை அளிக்கலாம்

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம (டிஜிட்டல்) உயிா் வாழ் சான்றிதழை அளிக்கும் வசதி நவ.1 -ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிவகங்கை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ். மாரியப்... மேலும் பார்க்க

பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து மேலநெட்டூா் கண்மாய்க்கு தண்ணீா் திறப்பு

வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீா் வெள்ளிக்கிழமை மாலை ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணையை வந்தடைந்தது. அங்கிருந்து மானாமதுரை அருகேயுள்ள மேலநெட்டூா் பாசனக் கண்மாய்க்கு திறந்து விடப்பட்டது. மத... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை தனிப்படைப் போலீஸாா் கைது செய்தனா். இளையான்குடியில் சில இடங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் வியாழக்... மேலும் பார்க்க