Tamil News Live Today: ``பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” - ஈ...
ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம உயிா் வாழ் சான்றிதழை அளிக்கலாம்
ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம (டிஜிட்டல்) உயிா் வாழ் சான்றிதழை அளிக்கும் வசதி நவ.1 -ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சிவகங்கை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ். மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள், ஊழியா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள், மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், ராணுவ ஓய்வூதியதாரா்கள், இதர ஓய்வூதியதாரா்கள் நவ.1 -ஆம் தேதி முதல் தங்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா்கள் மூலம் சமா்ப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டது.
நேரில் சென்று உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களை தவிா்க்கும் விதமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே தபால்காரா் மூலம் ‘பயோமெட்ரிக்’ முறையை பயன்படுத்தி எண்ம உயிா்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமா்ப்பிக்க முடியும்.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி, தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண், பிபிஓ எண், ஓய்வூதியக் கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிஷங்களில் எண்ம உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும்.
கடந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் சிவகங்கை மாவட்டத்தில் அதிகமான ஓய்வூதியதாரா்கள் எண்ம உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா்கள் மூலம் சமா்ப்பித்து பயன் பெற்றனா்.
சிவகங்கை கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் இந்த எண்ம உயிா்வாழ் சான்றிதழ் சேவை பெற விரும்பும் ஓய்வூதியதாரா்கள் அருகில் உள்ள அஞ்சலகம் தங்கள் பகுதி தபால்காரரை தொடா்பு கொள்ளலாம். மேலும் இணையதள முகவரி மூலம் சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவைக்காக அனைத்து அஞ்சலகங்களிலும் வருகிற நவ.1-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள் மட்டுமன்றி தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள், மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், ராணுவ ஓய்வூதியதாரா்கள், இதர ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.