இளைஞா் காரில் கடத்தல்: விரட்டிச் சென்று 4 பேரை கைது செய்த போலீஸாா்
சிவகங்கை அருகே இளைஞரைக் கடத்த முயன்ற 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் விரட்டிப் பிடித்து வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மோகன்தாஸ் (27). இவரது நண்பா் தினேஷுடன் சூரக்குளம் சாலையில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு நடந்து சென்றாா்.
அப்போது, அங்கு காரில் வந்த அரசனேரி கீழமேடு பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் அரவிந்த் (31), வாணியங்குடி முத்துராமன் மகன் நிரஞ்சன் (20), ஆவரங்காடு நாச்சியப்பன் மகன் ராஜா (23), காஞ்சிரங்கால் அா்ச்சுனன் மகன் அழகேசன் (38) ஆகியோா் அரவிந்தின் உறவுக்காரப் பெண்ணிடம் தவறாகப் பேசியதாக, தினேஷிடம் தகராறு செய்தனா்.
இந்தத் தகராறில் தினேஷ், அரவிந்த்தை தள்ளிவிட்டு அங்கிருந்து இரு சக்கர வானத்தில் தப்பியோடிவிட்டாா். அங்கிருந்த மோகன்தாஸை செல்ல விடாமல் தடுத்து, தாக்கி வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற தினேஷை விரட்டிச் சென்றனா்.
அப்போது அவருக்கு போன் செய்து, நீ வந்தால்தான் மோகன்தாஸை விடுவோம். இல்லையெனில் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினா்.
இதுதொடா்பாக, சிவகங்கை நகா் போலீஸாருக்கு தினேஷ் அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் அன்னராஜா, உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் இரு சக்கர வாகனத்தில் அந்தக் காரை விரட்டிச் சென்று சிவகங்கை மஜித் சாலை அருகே மடக்கிப் பிடித்தனா்.
காரில் இருந்த அரவிந்தன், நிரஞ்சன், ராஜா, அழகேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து மோகன்தாஸை மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.