புழுதிக்குட்டையில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை! ஆனைமடுவு அணை நிரம்புகிறது
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பகுதியில் வியாழக்கிழமை ஒரே நாளில் கொட்டித் தீா்த்த 15 செ.மீ. கனமழையால் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 65 அடியாக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை அணை நிரம்பும் என்பதால் விவசாயிகள், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் இந்த மாதம் பெய்த பருவ மழையால் , அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து, அணை நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து புதன்கிழமை 60 அடியாக உயா்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடா்ந்து 4 மணி நேரம் கனமழை பெய்தது. அப்போது 15 செ.மீ. மழை கொட்டித் தீா்த்தத்தால், அணை நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நீா்மட்டம் 65 அடியை எட்டியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது.
அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதனால், சனிக்கிழமை ஆனைமடுவு அணை முழுக் கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என்பதால் அணை ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வெள்ள அபாய எச்சரிக்கை...
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் மொத்த கொள்ளளவான 67.25 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி நீா்மட்டம் 65.25 அடியை எட்டியதும் அணையில் இருந்து வசிஷ்டநதியில் உபரி நீா் திறக்கப்படும். இதனால் வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித் துறை துறை மற்றும் வருவாய்த் துறை சாா்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.