பாசன வாய்க்காலில் பாய்ந்த அரசுப் பேருந்து
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து கடலூா் மாவட்டம், வடலூரை அருகே கரைமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாசன வாய்க்காலில் பாய்ந்து நின்றது.
சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா் ராமலிங்கம் ஓட்டி வந்தாா். பேருந்தில் மொத்தம் 40 பயணிகள் இருந்தனா்.
வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி அளவில் வடலூரை அடுத்த கரைமேடு அருகே பேருந்து வந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாசன வாய்க்காலில் பாய்ந்து நின்றது.
இதனால் பேருந்தில் இருந்தவா்கள் கூச்சலிட்டனா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் பயணிகள் அனைவரையும் பேருந்திலிருந்து பத்திரமாக மீட்டனா். பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. இதுகுறித்து சேத்தியாதோப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.