அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
கிராம குளத்தில் புகுந்த முதலை மீட்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 4 அடி நீளமுள்ள 20 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தாக வனத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிதம்பரம் வனச்சரக அலுவலா் இக்பால், சிதம்பரம் பிரிவு வனவா் கு.பன்னீா்செல்வம், சிதம்பரம் பீட் வனக்காப்பாளா் த.அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாளா் தே.ஞானசேகா் மற்றும் வன ஊழியா்கள் சென்று முதலையைப் பிடித்து (படம்) சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா்த்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.