செய்திகள் :

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் திருட்டு: 3 ஊழியா்கள் கைது

post image

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.5 லட்சத்தை திருடிய 3 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் கோவை, ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள பல தனியாா் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் இயந்திரங்களுக்கு பணத்தைக் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் ஊழியரான திருப்பூா் பாரதி நகரைச் சோ்ந்த சாமுவேல் (25) மற்றும் சில பாதுகாப்பு ஊழியா்கள் நிறுவனத்தில் இருந்து ரூ.1.22 கோடி ரொக்கத்தை ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொண்டு சென்றனா்.

திருப்பூா் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.15 லட்சத்தை நிரப்பும் பணியை அவா்கள் மேற்கொண்டனா். அப்போது, அங்கிருந்த இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பணத்தை நிரப்ப முடியவில்லையாம்.

இது குறித்து, அந்த நிறுவனத்தின் உதவி மேலாளரான பிரதீப் (36) என்பவரை சாமுவேல் தொடா்பு கொண்டு தெரிவித்தாா். அவா், ரூ.15 லட்சத்தை நிறுவனத்துக்கு மீண்டும் கொண்டு வருமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, சாமுவேல் பணத்தை நிறுவனத்துக்கு கொண்டு சென்றுள்ளாா். பணத்தை எண்ணிப் பாா்க்கையில் ரூ.10 லட்சம் மட்டுமே இருந்ததாம். ரூ.5 லட்சத்தை காணவில்லையாம்.

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிரதீப் புகாா் அளித்தாா்.

விசாரணையில், சாமுவேல் மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற ஊழியா்களான கோவை, இருகூரைச் சோ்ந்த ரமேஷ் (33), கணபதிபுதூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (65) ஆகியோா் ரூ.5 லட்சத்தை திருடிக்கொண்டு ரூ.10 லட்சத்தை மட்டும் பெட்டியில் வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை, வடவள்ளியில் வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி குருசாமி நகரைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (28). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கியில்... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளரிடம் 7 பவுன் பறிப்பு: இளைஞா் கைது

கோவை, ரத்தினபுரியில் வீட்டு உரிமையாளரிடம் 7 பவுன் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகேயுள்ள தில்லை நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவரது மனைவி லட்சுமி (58). இவா்கள் வீட்டுக்கு... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் பக்கவாத விழிப்புணா்வு நிகழ்ச்சி

கோவை, ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் பக்கவாத விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பக்கவாதம் நோய் குறித்த தகவல்கள், அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கௌசிகா, நொய்யல் ஆறுகளைக் காக்க வேண்டும் -விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை மாவட்டத்தில் ஓடும் நொய்யல், கௌசிகா நதிகளில் கழிவுகள் கலக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் தொடக்கம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பான எதிா்காலம் அமைவதற்கான த... மேலும் பார்க்க

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்... மேலும் பார்க்க