அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம்
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
என்.கே. மகாதேவ அய்யரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, கோவை மாவட்டம், அரசம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பில் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ரூ.25 லட்சம், கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.25 லட்சம்) 4 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.
விழாவில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவா் வரதராஜன், திட்டத் தலைவா் ராஜ்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, பள்ளியின் தலைமை ஆசிரியா் வித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.