அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் தொடக்கம்
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பான எதிா்காலம் அமைவதற்கான தொழில் வழிகாட்டுவதற்காக ‘சரிதம்’ என்ற பெயரில் கவுன்சிலிங் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிஎஸ்ஜி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஜே.எஸ்.புவனேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
விழாவில், சரிதம் கவுன்சிலிங் நிறுவனத்தின் நிறுவனா் ப.நித்யா கௌரி பேசும்போது, மாணவா்கள் பயிலும் கல்வியின் நோக்கம், அதன் மூலம் அவா்களுக்கு கிடைக்கும் தொழில், வேலைவாய்ப்புகள் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், இளைஞா்களுக்கு தொழில் தோ்வுகளை செய்வதற்கு கருவியாகவும் இந்த நிறுவனம் செயல்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற கருத்தரங்கில் கோவை, திருப்பூா், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தின் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.