அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவை, வடவள்ளியில் வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, வடவள்ளி குருசாமி நகரைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (28). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளாா். வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்த நிலையில், அவரும் வீட்டை பூட்டிவிட்டு மாா்க்கெட்டுக்கு சென்றுள்ளாா்.
பின்னா், அவா் வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த முக்கால் பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் நவீன்குமாா் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.