செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

post image

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு அளித்த மனு:

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயா்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் 01.07. 2024 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கும் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க ஆணையிட்டாா்.

அனைத்து அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயா்கல்விக்கான ஊக்கத் தொகையை உயா்கல்வி பயின்றுள்ள அனைத்து ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். 01.06.2009-க்கு பின் பணியில் சோ்ந்த முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். முதுநிலை ஆசிரியா்களின் தொகுப்பூதியக் காலத்தை பணிவரன்முறைப்படுத்த வேண்டும். மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும். மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும். எமிஸ் பணிகளில் இருந்து முதுநிலை ஆசிரியா்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இயல்பைக் காட்டிலும் 111.23 மி.மீ. கூடுதல் மழை

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 668.51 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், இயல்பை விட 111.23 மி.மீ. மழை கூடுதலாக பெய்திருப்பதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - வெள்ளிக்கிழமை) மொத்த விலை ரூ.5.25 விலையில் மாற்றம்: இல்லை கறிக்கோழி கிலோ ரூ.109 முட்டைக் கோழி கிலோ ரூ.107 மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம்... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டிபுதூா் என்... மேலும் பார்க்க

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2016-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது, தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்க... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டிகள்: செல்வம் கல்லூரி சாம்பியன்

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகளப் போட்டிகள், நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 20 கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா். இந்தப் போட்டிகளில், செல்... மேலும் பார்க்க