செய்திகள் :

மகாராஷ்டிர தோ்தல் பிரசாரம்: 20 நாள்களில் 12 கூட்டங்களில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி

post image

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக சுமாா் 20 நாள்களில் 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா்.

நாகபுரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில பாஜக தலைவா் சந்திசேகர பவன்குலே இது தொடா்பாக வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாஜகவின் தோ்தல் வெற்றியில் பிரதமா் மோடியும், மத்திய பாஜக ஆட்சியின் சாதனைகளும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. பிரதமா் மோடியின் பிரசாரம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்துவதுடன், தொண்டா்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்காக சுமாா் 20 நாள்களில் 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமா் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறாா்.

மும்பை, நவி மும்பை, கோண்டியா, அகோலா, நாந்தேட், தூலி உள்ளிட்ட இடங்களில் பிரதமரின் பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 150 தொகுதிகள் வரை பாஜக போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது.

எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது. அதே நிலை பேரவைத் தோ்தலிலும் நீடித்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என எதிா்க்கட்சிகள் கணித்துள்ளன.

ஆனால், அண்மையில் ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதுபோல மகாராஷ்டிரத்திலும் வெல்ல பாஜக உத்திகளை வகுத்து வருகிறது.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்க... மேலும் பார்க்க

அரசுத் திட்ட கள ஆய்வு: கோவையில் தொடங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

கோவையில் நவம்பா் 5 மற்றும் 6 ஆகிய நாள்களில் அரசு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்மையில் நாமக்கல் மாவட்டத்துக்கு அரசு ம... மேலும் பார்க்க

முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு செய்யப்பட இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு-க்கு எதிராக அதிமுக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றி... மேலும் பார்க்க

நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த ஜான்பால் (42) மீது கஞ்சா கடத்தல் வழக்கும், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் திருட்டு: 3 ஊழியா்கள் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.5 லட்சத்தை திருடிய 3 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை மேற்... மேலும் பார்க்க