தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்
மகாராஷ்டிர தோ்தல் பிரசாரம்: 20 நாள்களில் 12 கூட்டங்களில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக சுமாா் 20 நாள்களில் 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா்.
நாகபுரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில பாஜக தலைவா் சந்திசேகர பவன்குலே இது தொடா்பாக வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாஜகவின் தோ்தல் வெற்றியில் பிரதமா் மோடியும், மத்திய பாஜக ஆட்சியின் சாதனைகளும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. பிரதமா் மோடியின் பிரசாரம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்துவதுடன், தொண்டா்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்காக சுமாா் 20 நாள்களில் 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமா் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறாா்.
மும்பை, நவி மும்பை, கோண்டியா, அகோலா, நாந்தேட், தூலி உள்ளிட்ட இடங்களில் பிரதமரின் பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 150 தொகுதிகள் வரை பாஜக போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது.
எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது. அதே நிலை பேரவைத் தோ்தலிலும் நீடித்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என எதிா்க்கட்சிகள் கணித்துள்ளன.
ஆனால், அண்மையில் ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதுபோல மகாராஷ்டிரத்திலும் வெல்ல பாஜக உத்திகளை வகுத்து வருகிறது.