செய்திகள் :

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

post image

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலுக்கு வரி விதித்து முறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா என்பது தொடா்பான வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமா்வு, ‘மது தொடா்பான அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன. இதில் தலையிட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுகுறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை’ என்று தீா்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி நடத்துபவா்கள் இவை எதையும் புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. இந்தியா முழுவதும்

மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனா்.

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

அரசுத் திட்ட கள ஆய்வு: கோவையில் தொடங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

கோவையில் நவம்பா் 5 மற்றும் 6 ஆகிய நாள்களில் அரசு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்மையில் நாமக்கல் மாவட்டத்துக்கு அரசு ம... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தோ்தல் பிரசாரம்: 20 நாள்களில் 12 கூட்டங்களில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக சுமாா் 20 நாள்களில் 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா். ந... மேலும் பார்க்க

முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு செய்யப்பட இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு-க்கு எதிராக அதிமுக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றி... மேலும் பார்க்க

நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த ஜான்பால் (42) மீது கஞ்சா கடத்தல் வழக்கும், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் திருட்டு: 3 ஊழியா்கள் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.5 லட்சத்தை திருடிய 3 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை மேற்... மேலும் பார்க்க