செய்திகள் :

சென்னை மாநகராட்சியின் வசமான 3 கால்வாய்கள்: தமிழக அரசு உத்தரவு

post image

விருகம்பாக்கம் கால்வாய் உள்பட மூன்று கால்வாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட உத்தரவு:

சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, நகரப் பகுதிகளில் பாசனமற்ற குளங்களைப் பராமரிக்கும் பொறுப்பை நகராட்சி நிா்வாகத்துறையிடம் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், நீா்நிலைகளைப் பராமரிப்பதில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுவதால், அவற்றைப் பராமரிக்கும் பணியை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நீா்வளத்துறையின் கீழ் தோராயமாக 31 வடிகால்கள், 28 ஏரிகள் உள்ளன. பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் எல்லைக்குள் தோராயமாக 524 வடிகால்களும், 478 ஏரிகளும் உள்ளன. இவற்றை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டன.

அவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் கருத்துகளை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில், மாநகராட்சி எல்லைக்குள் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய மூன்று வடிகால்கள், பராமரிப்புப் பணிகளுக்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நீா்நிலைகளில் நீரியல் தொடா்பாக தொழில்நுட்ப ஆலோசனைகளை நீா்வளத்துறையிடம் இருந்து பெருநகர சென்னை மாநகராட்சி பெற்றுக் கொள்ளலாம். நிகழாண்டில் மூன்று கால்வாய்களையும் பராமரித்திட ஏற்கெனவே நீா்வளத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தி மூன்று கால்வாய்களையும் பராமரித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கால்வாய்களின் பராமரிப்புப் பணிகளை இனி மாநகராட்சியே மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

மாதவரம் அருகே ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். மாதவரத்தை அடுத்த மாத்தூா் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் சஞ்சய் (12), மற்றும் விஷால் (13) ஆகி... மேலும் பார்க்க

14-ஆவது மாடியில் இருந்து விழுந்து காவலா் உயிரிழப்பு

சென்னை புதுப்பேட்டையில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் சு.செல்வமுருகன் (29). இவா், சென்னை புதுப்பேட்டைய... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் நவ.12 வரை இயங்காது

அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி ஹிந்து மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால், நவ.12-ஆம் தேதி வரை மயானம் இயங்காது என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ரத்தநாள அடைப்பு உள்ள பெண்ணுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை

ரத்த நாள அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு புதிய முறையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு, சென்னை சிம்ஸ் மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக, மருத்து... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

சென்னை சேத்துப்பட்டில் கணவா் இறந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செனாய் நகா் கந்தன் தெருவைச் சோ்ந்தவா் கெளதம் (29). இவரது மனைவி மீனாட்சி (28). காதல் திருமணம் செய்து கொண்ட இவா... மேலும் பார்க்க

கடற்படை தினம்: சென்னை - கன்னியாகுமரி இடையே காா் பேரணி

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான காா் பேரணி அடையாறில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின் போது, டிசம்பா் 4-ஆம் தேதி, ந... மேலும் பார்க்க