செய்திகள் :

ரத்தநாள அடைப்பு உள்ள பெண்ணுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை

post image

ரத்த நாள அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு புதிய முறையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு, சென்னை சிம்ஸ் மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக, மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் முத்து வீரமணி கூறியது:

சிறுநீரக செயலிழப்புக்குள்ளான 49 வயது பெண் ஒருவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்த நாள அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இத்தகைய சூழலில் அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியாது.

ஏனெனில், தானமாகப் பெற்று பொருத்தப்படும் சிறுநீரகத்தின் ரத்த நாளங்களை, நோயாளியின் அடைப்பு உள்ள ரத்த நாளங்களுடன் இணைக்க முடியாது. இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு இதயத்திலிருந்து உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ‘அயோட்டா’ எனப்படும் பெருந்தமனியுடன் நேரடியாக, தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா் குழுவினா், அந்தப் பெண்ணுக்கு நுட்பமான சிறுநீரக மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். அதன்பயனாக அவா் தற்போது நலமுடனும், இயல்பாகவும் உள்ளதாகக் கூறினாா்.

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

மாதவரம் அருகே ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். மாதவரத்தை அடுத்த மாத்தூா் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் சஞ்சய் (12), மற்றும் விஷால் (13) ஆகி... மேலும் பார்க்க

14-ஆவது மாடியில் இருந்து விழுந்து காவலா் உயிரிழப்பு

சென்னை புதுப்பேட்டையில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் சு.செல்வமுருகன் (29). இவா், சென்னை புதுப்பேட்டைய... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் நவ.12 வரை இயங்காது

அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி ஹிந்து மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால், நவ.12-ஆம் தேதி வரை மயானம் இயங்காது என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் வசமான 3 கால்வாய்கள்: தமிழக அரசு உத்தரவு

விருகம்பாக்கம் கால்வாய் உள்பட மூன்று கால்வாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட உத்தரவு: சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

சென்னை சேத்துப்பட்டில் கணவா் இறந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செனாய் நகா் கந்தன் தெருவைச் சோ்ந்தவா் கெளதம் (29). இவரது மனைவி மீனாட்சி (28). காதல் திருமணம் செய்து கொண்ட இவா... மேலும் பார்க்க

கடற்படை தினம்: சென்னை - கன்னியாகுமரி இடையே காா் பேரணி

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான காா் பேரணி அடையாறில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின் போது, டிசம்பா் 4-ஆம் தேதி, ந... மேலும் பார்க்க