செய்திகள் :

ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்: அமைச்சா் செந்தில் பாலாஜி

post image

உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவா் அளித்த பதிலுரை:

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 27 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 74 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. 393 துணை மின் நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதில் 116 நிலையங்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்த மின் தேவையில் 50 சதவீதத்தை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை முதல்வா் நிா்ணயித்துள்ளாா். அதன்படி, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த உற்பத்தியில் பாதி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்க வேண்டும் என்றும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்திலும், அடுத்த அலகு அக்டோபா் மாதத்திலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மது, போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே முதல்வரின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம். இந்தியா முழுக்க மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்திலும் அதனை செயல்படுத்துவோம் என்றாா் அமைச்சா் செந்தில் பாலாஜி.

சிறை நிரப்பும் போராட்டம்: ஓய்வூதியதாரா் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவா் நெ.இல.ஸ்ரீதரன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வா் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த குறுகிய கா... மேலும் பார்க்க

மின்வாரியம் தனியாா்மயமாகாது: அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதி

தமிழ்நாடு மின்வாரிய நடவடிக்கைகளில் தனியாருக்கு இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானிய... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஆறு கட்ட போராட்டம்: காங்கிரஸ்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

யாா் ஆட்சியில் மின்கட்டண உயா்வு அதிகம்? அமைச்சா் விளக்கம்

அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயா்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி விளக்கம் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க