செய்திகள் :

நீரேற்று நிலையத்தை மறுசீரமைக்க டிஎன்பிஎல் ஆலை நிதியுதவி

post image

நடையனூா் நீரேற்று பாசன விவசாயிகள் அமைப்பின் நீரேற்று நிலையத்தை மறுசீரமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, நடையனூா் நதி நீரேற்று பாசன விவசாயிகள் அமைப்பின் தலைமை நீரேற்று நிலையத்தை மறு சீரமைப்பு செய்திடவும், பழுதடைந்த மின்மோட்டாா்களை சரி செய்திடவும் ரூ. 3.75 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் காகித நிறுவனத்தின் பொது மேலாளா் ( மனித வளம்) கே. கலைச்செல்வன், முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ். சிவகுமாா் ஆகியோா் விவசாய அமைப்பின் பொறுப்பாளா்களிடம் ரூ.3.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.

கோயில்களுக்கு நிதியுதவி: இதேபோல், ஆலையின் சுற்றுப்புற கிராமங்களான உப்புபாளையம், மேட்டுப்பாளையம், வருந்தியாபாளையம், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊா்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு புனரமைப்பு மற்றும் மகா கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு நிதி உதவியாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலைகளை அந்தந்த கோயில் திருப்பணி குழு உறுப்பினா்களிடம் வழங்கப்பட்டது.

குளித்தலையில் போலி தங்கக்காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது

கரூா் மாவட்டம், குளித்தலையில் போலி தங்கக் காசுகளை விற்க முயன்ற சேலத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ்... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ பரவல்: கல்வி அதிகாரிகள் விசாரணை

கரூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடா்ந்து, கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். கரூா் மாவட்டம், தாந்தோ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் இல்லை: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

கரூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சி... மேலும் பார்க்க

நகர பேருந்துகளில் சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க கரூரில் ‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் மூலம் பயணச்சீட்டு

கரூா் மாவட்டத்தில் நகர பேருந்துகளில் சில்லறைத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட க... மேலும் பார்க்க

கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை

கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் வாழைத்தாா் ஏலம் விடப்படும் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புகழூா் மற்றும்... மேலும் பார்க்க