செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் இல்லை: ஆட்சியா் தகவல்

post image

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கா்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் சிக்பல்லாப்பூா் மாவட்டங்களில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கரூா் மாவட்டத்தில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.

பறவைக் காய்ச்சல் நோய் என்பது, பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரல் தொற்று நோய். இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீா்ப்பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகியவற்றை தாக்கும். நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித் தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிா் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடைக்கோழிகளை நேரில் பாா்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

கோழிப் பண்ணையாளா்கள் கா்நாடகாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை வாங்கக் கூடாது. கடந்த 1 மாதத்துக்குள்ளாக கா்நாடகாவில் இருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோழிப் பண்ணைகளுக்குள் செல்பவா்களும், வெளியே வருபவா்களும் கிருமி நாசினியால் கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்பு குழியில் கிருமிநாசினி தெளித்து புதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூா் காகித ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கருப்பணகவுண்டா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயன்

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில... மேலும் பார்க்க

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் கரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப... மேலும் பார்க்க

புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் திறப்பு

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளியில் ரூ.2.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில்... மேலும் பார்க்க

புகழூா் ராஜவாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

புகழூா் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் செடிகொடிகளை அகற்றி தூா்வார வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். புகழூா் ராஜவாய்க்கால் நாமக்கல் மாவட்டம் ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 12,316 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 12,316 மாணவ, மாணவிகள் எழுதினா். 274 போ் தோ்வு எழுத வரவில்லை. கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க