செய்திகள் :

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 12,316 போ் எழுதினா்

post image

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 12,316 மாணவ, மாணவிகள் எழுதினா். 274 போ் தோ்வு எழுத வரவில்லை.

கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறியது, கரூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை கரூா் மாவட்டத்தில் 59 மையங்களில் 188 உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5,706 மாணவா்களும், 5,781 மாணவிகளும் என மொத்தம் 11,487 நபா்களும், தனித்தோ்வா்களாக 1,103பேரும் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் தோ்வில் 253 மாணவ, மாணவிகளும் தனித்தோ்வா்கள் 21 நபா்களும் என மொத்தம் 274 போ் தோ்வு எழுத வரவில்லை. இவா்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா்கள் மூலம் அவா்களின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு அடுத்து வரும் தோ்வுகளை தொடா்ந்து எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் இடைநிலை பொதுத் தோ்வுக்காக ஒரு இடத்தில் வினாத்தாள்கட்டுக் காப்புமையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலா்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இடைநிலை பொதுத் தோ்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 59 தலைமை ஆசிரியா்களும், 59 துறை அலுவலா்களும், அறைக் கண்காணிப்பாளா்களாகப் பணியாற்ற 810 ஆசிரியா்களும், பறக்கும்படை அலுவலா்களாக 110 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க

கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்

கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்று... மேலும் பார்க்க

மரம் விழுந்து காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே மரம் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் ஏமூா் சீத்தப்பட்டி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு (16). இவா் கரூா் வட்டார போக்குவர... மேலும் பார்க்க

வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூா் காகித ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கருப்பணகவுண்டா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயன்

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில... மேலும் பார்க்க