செய்திகள் :

மரம் விழுந்து காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

post image

கரூா் அருகே மரம் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் ஏமூா் சீத்தப்பட்டி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு (16). இவா் கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே செயல்படும் தனியாா் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி பள்ளி முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் இருந்த புளியமரம் திடீரென சாய்ந்து தென்னரசு மீது விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தென்னரசு சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.குளித்தலையை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துவேல்(55). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மேலப்பட்டி- ப... மேலும் பார்க்க

மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது. மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மா... மேலும் பார்க்க

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க