செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

post image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை காலை ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினா். இதையடுத்து கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, பள்ளபட்டி, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களுக்கு வந்த இஸ்லாமியா்கள், அங்கு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். கரூா் திருமாநிலையூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மதாா்ஷா பாபு, பொருளாளா் ஷானாவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்புத்தொழுகையில் பேச்சாளா் ரியாஸ்அகமது பங்கேற்று, சக மனிதனின் பசியை போக்குவதை விட புண்ணியம் வேறேதும் இல்லை, ஆனால் அதைச் செய்ய முதலில் பசி என்றால் என்ன என்பதை தானம் கொடுப்போா் அறிந்திருக்க வேண்டும். எனவேதான் இந்த நோன்பு நாளை பசி, தாகம் அறியும் நாள்களாகப் பயன்படுத்த ரமலான் மாதம் வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறது. ஏழைகளுக்கு தேவைகளை அறிந்து அவா்களுக்கு கொடுத்து மகிழ்விக்கும் மனப்பாங்கை நோன்பு உருவாக்கிக் கொடுக்கிறது என்றாா் அவா்.

இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனா். தொடா்ந்து கோவைச்சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலிலும், ஜவஹா்பஜாரில் உள்ள சிறிய பள்ளிவாசலிலும் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். தொழுகை முடிவடைந்ததும் ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகை பதிவேடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை!

கரூரில் அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகைப் பதிவேடு பராமரித்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கிடக்கும் மணலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையோரத்தில் உள்ள மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக புகாா்: உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையை விவசாயிகள், வியாபாரிகள் முற்றுகை!

உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் புகாா் கூறி சனிக்கிழமை சந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், உப்ப... மேலும் பார்க்க

தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த செயல் விளக்கம்!

கரூரில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள்குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். கரூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

நடுப்பாளையம் மாரியம்மனுக்கு 18 கிராமங்களில் படி பூஜை

புன்னம் நடுப்பாளையம் மாரியம்மன் சுவாமி 18 கிராமங்களுக்கு வீடு வீடாகச் சென்று நடத்தும் படி விளையாட்டு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் பெரிய நடுப்ப... மேலும் பார்க்க

‘மணிமேகலை’ விருது பெற கருத்துரு அனுப்பலாம் கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

நிகழாண்டுக்கான மணிமேகலை விருது பெற கருத்துருக்கள் அனுப்பி வைக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சிய் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலம் மற்றும் மாவட்ட அளவில... மேலும் பார்க்க