செய்திகள் :

மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு

post image

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது.

மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மாலைமேட்டு பகுதியில் கோடங்கிப்பட்டி, மணக்காட்டுநாயக்கனூா், கூனமநாயக்கனூா், காமாநாயக்கனூா், கம்பளிநாயக்கனூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக்குச் சொந்தமான கோப்பனாா் சாமி, கன்னிமாா் சாமி, வரதராஜபெருமாள், குட்டைக்கோயில் சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெறும். நிகழாண்டுவிழா கடந்த 25-ஆம்தேதி பக்தா்களுக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் விரதம் இருந்து மூன்று கால பூஜைகள் நடத்தி வந்தனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பொங்கல், கொழுக்கட்டை வைத்து வழிபட்டனா்.

தொடா்ந்து திங்கள்கிழமை காலை மாடுகள் மாலைதாண்டும் விழா நடைபெற்றது. முன்னதாக திருச்சி, கரூா், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 16 மந்தையா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் கோயில் முன் மாடுகள் நிறுத்தப்பட்டு புண்ணிய தீா்த்தம் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சியை கடவூா் ஜமீன்தாா் மோகன்குமாா் முத்தையா தொடக்கிவைத்தாா்.

கோயில் முன் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எல்லைச்சாமி கோயிலில் இருந்து மாடுகள் கோடங்கிப்பட்டி மாலைமேட்டு கோப்பனாா் சுவாமி கோயிலை நோக்கி ஓடி வந்தன. இதில் கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள செம்பகனம் எரகாமிநாயக்கா் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லையைக் கடந்து முதலிடம் பிடித்தது. இரண்டாவதாக புதுக்கோட்டை மாவட்டம் சேமங்களம் அய்யாசீமை நாயக்கா் மந்தை மாடு ஓடி வந்தது.

இதையடுத்து வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு கம்பளத்து நாயக்கா்களின் வழக்கப்படி மூன்று கன்னிப்பெண்கள் வைத்திருந்த எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. பின்னா் மூன்று கன்னிப்பெண்களுடன் வெற்றிபெற்றவா்கள் தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிவடைந்தது. இதில் ஊா்நாயக்கா், மந்தா நாயக்கா் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க