செய்திகள் :

கைவிடப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேசம் ஒருநாள் தொடர்; காரணம் என்ன?

post image

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. தற்போது, இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதாக இருந்தது. ஆனால், ஒருநாள் தொடர் கைவிடப்பட்டு, தற்போது வங்கதேச அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!

வங்கதேசத்துக்கு எதிரான இந்த டி20 தொடர் நிறைவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராப் வால்டர் விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக ராப் வால்டர் செயல்பட்டு வந்தார். கடந்த 2023... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா? ஜியார்ஜ் பெய்லி பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவ... மேலும் பார்க்க

சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடும் விராட்கோலி! ஸ்மித்துடன் ஒரே களத்தில்..!

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற லீக் தொடரான பிக்-பாஸ் லீக்கின் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடுவது குறித்த தகவல்களை அந்த அணி உறுதிபடுத்தியிருக்கிறது.இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐபிஎல்... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+, ஷ்ரேயாஸ் உள்ளே, இஷான் வெளியே?

டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-25ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தினை சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மேன், பியூ வெப்ஸ்டராகிய 3 இளம் வீரர்கள் ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் தனது தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், டி20 அண... மேலும் பார்க்க