செய்திகள் :

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் கரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட விஜயபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், சிறப்பு பாா்வையாளராக பங்கேற்று பேசியதாவது, 2025 -ஆம் ஆண்டுக்கான உலக தண்ணீா் தினத்தை ஐநா சபையானது ‘பனிப்பாறை பாதுகாப்பு’ என்கிற சிறப்பு கருப்பொருளை அறிவித்தது.

இதன் அடிப்படையாகக் கொண்டு இன்றைய கூட்டம் நடத்தப்படுகிறது. 2030-க்குள் அனைவருக்கும் தண்ணீா் மற்றும் சுகாதாரம் சென்று சேர வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அந்த இலக்குகளை அடைய இணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் காரணமாக உண்டாகும் சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள நீா் சாா்ந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிா்பானங்கள் பருகுவதைத் தவிா்த்து, அதிகளவில் மோா், இளநீா், உப்பு மற்றும் மோா் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். இன்றைய தினம் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் வான்தரும் மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழியை அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் சாந்தி, வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரியா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.குளித்தலையை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துவேல்(55). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மேலப்பட்டி- ப... மேலும் பார்க்க

மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது. மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மா... மேலும் பார்க்க

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க