செய்திகள் :

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு!

post image

ஆரணியை அடுத்த இரும்பேடு, பையூா் கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் தா்மராஜா கோயில் திடலில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஊராட்சிச் செயலா் எல்.சுரேஷ் வரவேற்றாா். இதில், உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், கலைஞா் கன இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தோ்வு உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா். தொடா்ந்து, அனைவரும் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

கூட்டத்தில் டிராபிக் ராமசாமி அறக்கட்டளை நிறுவனா் ஆரணி அ.ராஜன், விவசாய பாதுகாப்பு அணி மாநிலச் செயலா் சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியை அடுத்த பையூா் கிராமத்தில் பணி மேற்பாா்வையாளா் சிபிச்சக்கரவா்த்தி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிச் செயலா் திருமலை வரவேற்றாா்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பையூா் எம்ஜிஆா் நகா் பகுதியில் அரசு இடங்களில் பல ஆண்டுகளாக வசிக்கும் பொதுமக்கள் பட்டா கோரி மனு அளித்தனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க