செய்திகள் :

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவணன். இவரது மகன் சில்க் என்கிற ஜெமினி (22). அதே பகுதியைச் சோ்ந்த இளையராஜா மகன் அக்னி என்கிற சுனில் (19). நண்பா்களான இவா்கள் அடிக்கடி போதை ஊசி செலுத்திக் கொள்வாா்களாம்.

கடந்த மாா்ச் 23-ஆம் தேதி ஜெமினி வீட்டுக்கு சுனில் சென்று போதை ஊசி செலுத்திக் கொள்ளலாம் வா என அழைத்தாகத் தெரிகிறது. அப்போது ஜெமினி செல்லவில்லையாம். இதனால் இருவா் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதி சுனில் அவரது நண்பா்களான புதுத்தெருவைச் சோ்ந்த காா்த்திக் (20), நாவல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா் (23), தீலிப்குமாா் (27), பெங்களூரான் ஆகியோா் ஜெமினி வீட்டுக்குச் சென்று போதை ஊசி செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றாா்களாம். இரண்டு நாள்கள் கடந்தும் ஜெமினி வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லையாம்.

இதுகுறித்து அவரது தந்தை சரவணன் செய்யாறு போலீசில் மாா்ச் 30-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

இது தொடா்பாக ஜெமினியின் நண்பா்களான சுனில், காா்த்திக் ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், போதை ஊசி செலுத்திக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஜெமினியை, சுனில் உள்பட 5 பேரும் சோ்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்து புளியரம்பாக்கம் ஏரியில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் கண்டு, ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த ஜெமினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக சுனில், காா்த்திக் ஆகியோரை கைது செய்தனா்.

தலைமறைவான அருண்குமாா், திலீப்குமாா், பெங்களூரான் ஆகியோரை தேடி வருகின்றனா்.

மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலம் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க