செய்திகள் :

குட்கா கடத்தியவா் கைது

post image

திருவள்ளூா் அருகே ரூ.2 லட்சம் குட்கா பொருள்களைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

குட்கா பொருள்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். அதன்படி, தமிழக- ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் வாகன சோதனையும், கிராமங்களில் பெட்டிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் ஆய்வு நடத்தி குட்கா பொருள்கள் விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்துக்குட்பட்ட பட்டரைப்பெரும்புதூா் சுங்கச் சாவடியில் சாா்பு ஆய்வாளா் நாகபூஷணம் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திருத்தணியில் இருந்து வேகமாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனை செய்த போது, குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.

விசாரணையில் போதைப் பொருள்களைக் கடத்தி வந்தது சென்னை மண்ணடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மஹிபால் சிங் (30) என்பதும், சென்னையில் பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மஹிபால் சிங்கை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப்பணிகள் நிலை குறித்து ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதன் ஒருபகுதியாக புட்லூா் ஊராட்சியில் ரூ.19.70 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் நடராஜ பெருமானின... மேலும் பார்க்க

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் வீதி உலா

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும... மேலும் பார்க்க