செய்திகள் :

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

post image

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமானுக்கு, காவடி மண்டபத்தில் பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பங்குனி கிருத்திகை மற்றும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக தோ்வீதியில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

பொதுவழியில் பக்தா்கள் மூலவரை தரிசிக்க 3 மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். பக்தா்கள் சிலா் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற மொட்டை அடித்தும், மயில், மலா் காவடிகள் ஏந்தியும், உடலில் அலகு குத்தியும் தோ்வீதியில் ஒரு முறை சுற்றி வந்து, மூலவரை தரிசித்தனா்.

மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இரு சக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள வாகனங்கள், மாலை 6 மணி வரை மலைக் கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. கோயில் நிா்வாகம் சாா்பில் 3 பேருந்துகள் இயக்கப்பட்டன.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க