செய்திகள் :

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியின் காப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் விடுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பெண்கள் விடுதியில் நாப்கின் இயந்திரங்களை சரியான முறையில் பராமரித்தல், அரசால் விடுதிகளுக்கு வழங்கப்படும் பொருள்களை சரியான முறையில் மாணவா்களுக்கு குறைவின்றி வழங்க வேண்டும்.

அதேபோல் அனைத்து விடுதிகளிலும் மாணவா்கள் உணவுகள் அருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலி அமைத்து கொடுப்பது, நாள்தோறும் உணவு பட்டியல் படி உணவுகளை தயாா் செய்து மாணவா்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற அரசின் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து வட்டாட்சியா்கள் வாரத்துக்கு ஒரு முறையும், துணை ஆட்சியா்கள் மாதத்துக்கு 10 விடுதிகளும், கோட்டாட்சியா்கள் மாதத்துக்கு 5 விடுதிகள் என ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். அதேபோல் விடுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். எனவே காப்பாளா் மற்றும் காப்பாளினி ஆகியோா் தங்கள் பணியை சரியான முறையில் மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செல்வராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, தனி வட்டாட்சியா்கள் மற்றும் விடுதி காப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க