மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!
புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் திறப்பு
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளியில் ரூ.2.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கட்டப்பட்ட இந்த மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்து பேசியது, இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சியுடன் இடுபொருள்களும் வழங்கப்படும்.
மேலும் இனப்பெருக்க நாட்டுக்கோழிகள், வான்கோழி மற்றும் ஜப்பானிய காடை பண்ணைகளை நிறுவி புறக்கடை முறையில் கோழி வளா்ப்பு தொழிலை ஊக்குவிப்பதற்காகவும், உயா்தரமான நாட்டுக்கோழி, வான்கோழி மற்றும் ஜப்பானிய காடைகளின் முட்டைகள், இளம் குஞ்சுகள் மற்றும் இதர இடுபொருள்களை தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், அவற்றை அறிவியல் முறையில் பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், கால்நடை தீவனமான அசோலா உற்பத்தி அலகை நிறுவுவதற்கும் இந்த மையம் பயன்படும் என்றாா் அவா். முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தா் முனைவா் க.ந.செல்வக்குமாா், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.