செய்திகள் :

35 கிலோ கஞ்சா பறிமுதல்: 10 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் 35 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 10 போ் கைது செய்யப்பட்டனா்.

பண்ருட்டி ரயில் நிலையம் அருகே சில்லறை வியாபாரிகளுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அங்கிருந்த ஆந்திரம் மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரராவ் மகன் பிரதீப் (26), புவனகிரி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமாா் (33), சக்கரபாணி மகன் புகழேந்தி (26), பண்ருட்டி செந்தில்குமாா் மகன் ஜெயசுமன் (25), கடலூா் முருகன் மகன் ஜீவானந்தம் (25), தோப்புக்கொல்லை வெங்கடேசன் மகன் அஜய்குமாா் (20), கலைச்செல்வன் மகன் ஜீவா (20), கிருஷ்ணமூா்த்தி மகன் கிருஷ்ணசெல்வம் (18), பாஸ்கா் மகன் சம்பத் (20), புலவன்குப்பம் கிருஷ்ணன் மகன் ராஜா (27) ஆகியோரை கைது செய்தனா்.

இதில், பிரதீப், அருண்குமாா், புகழேந்தி ஆகியோா் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பண்ருட்டி, நெய்வேலி, கடலூா் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் சில்லறை வியாபாரிகள் மூலம் கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 35 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க