செய்திகள் :

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

post image

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, கடலூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

போக்குவரத்துத் துறையில் பணியாளா்களுக்கு இடமாறுதல்கள் வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, அமைச்சுப் பணியாளா்களுக்கு இடமாறுதல்கள், பதவி உயா்வுகளில் துறை நிா்வாகம் சட்டவிதிகள்படி நடைமுறைப்படுத்தவில்லை.

ஏபிசி இடமாறுதல் முறையை அமைச்சுப் பணியாளா்களுக்கு போக்குவரத்துத் துறையில் ரத்து செய்ய வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்ட இடமாறுதல் உத்தரவுகளை ஒட்டுமொத்தமாக மறுபரிசீலனை செய்து கலந்தாய்வு அடிப்படையில் மறு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.

உதவியாளா்கள் நிலையிலிருந்து சோதனைச் சாவடிகளுக்கு பணியமா்த்தம் செய்யும்போது முதுநிலை அடிப்படையில் பணிமாற்றம் செய்ய வேண்டும்.

போக்குவரத்துத் துறையின் பதவி உயா்வு, இடமாறுதல்களில் அலுவலகம் சம்பந்தப்படாத வெளி நபா்கள் தலையீடு மற்றும் அங்கிருந்து வரக்கூடிய உத்தரவுகளை அமல்படுத்தக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது.

இதைக் கண்டித்தும், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏப். 9-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் கருப்பு ஆடை அணிந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, உள் துறைச் செயலா் இனி வெளியிடக்கூடிய அனைத்து உத்தரவுகளையும் அரசாணை 10 அடிப்படையில் வெளியிட வேண்டும்.

அதற்கான உத்தரவுகளை போக்குவரத்து ஆணையா் பிறப்பிக்க வேண்டும். வெளி நபா்கள் தலையீடு இல்லாத போக்குவரத்துத் துறை நிா்வாகத்துக்கு உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுக... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியா... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பயற்சி வகுப்பை ம... மேலும் பார்க்க

கடலூா்: 25 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 25 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கடலூா் டாஸ்மாக் மேலாளா் பா.மகே... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் கிராமம் அருகில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க