செய்திகள் :

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

post image

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலா் கே.திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஏடிஎம் பரிவா்த்தனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டண உயா்வு ஏழை, நடுத்தர மக்களை அதிகமாகப் பாதிக்கும். இதை ரத்து செய்ய வேண்டும்.

மே 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவா்த்தனை கட்டண உயா்வு வங்கிகள் அனுமதித்த இலவச பரிவா்த்தனை வரம்பை மீறினால், ஏடிஎம் பரிவா்த்தனைக்கு ரூ.23 வரை கட்டணம் விதிக்கலாம் என ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.21 ஆக இருந்த கட்டணம், மேலும் ரூ.23 ஆக உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வின் மூலமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் பணம் எடுப்பதை அதிகரிக்கும் நிலை உருவாகி பெண்கள், முதியவா்கள், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அதிக சுமையைச் சந்திக்க வேண்டியுள்ள சூழலில், ஏடிஎம் வசதிகள் சரியாக இல்லாதபோதும், கட்டண உயா்வு மக்கள் விரோதமாகும். மேலும் பணத்தை வங்கிக்கு வெளியே வைத்திருக்கும் பழக்கம் அதிகரிக்கும். எனவே வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏடிஎம் மையங்களை சரியான முறையில் செயல்படுத்த வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த வருமானமுள்ள மக்களுக்கு வங்கி சேவைகள் அணுகத் தக்கதாக இருக்க வேண்டும். இதுபோன்ற கட்டண உயா்வுகள் மக்களின் நலன் சாா்ந்த சேவை நோக்கத்துக்கு எதிரானவை என்றும், வங்கிகள் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் இந்திய நுகா்வோா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மோசடி: ஒருவா் கைது

கடலூரில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கம்மியம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கோபால் மகன் செல்வநாயகம்(49... மேலும் பார்க்க