செய்திகள் :

ரூ.5 கோடி மோசடி: ஒருவா் கைது

post image

கடலூரில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா், கம்மியம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கோபால் மகன் செல்வநாயகம்(49). இவா், செம்மண்டலம் பகுதி குண்டுசாலையில் இயற்கை முறை வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வந்தாா். கடந்த 2022 முதல் 2025 வரையில் தீபாவளி சீட்டு, தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி கடலூா், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புவனகிரி, பண்ருட்டி மற்றும் இதரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து ரூ.5 கோடி வரை பணம் வசூல் செய்தாராம்.

அந்த பணத்தை இணைய வா்த்தகம் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தாராம். இந்நிலையில், சீட்டு கட்டிய 800-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு ரூ.3 கோடி பணம் கொடுக்காமல் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி அலுவலகத்தை பூட்டி தலைமறைவாக இருந்தாா்.

இந்நிலையில் செல்வநாயகத்திடம் தீபாவளி சீட்டு மற்றும் மாதாந்திர ஏலச்சீட்டு கட்டிய கடலூா், வெளிச்செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த பாவாடை மகன் அன்பரசு மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு சுமாா் ரூ.16,41,938 மற்றும் 8 கிராம் தங்க காசு, புவனகிரி அருள்குமாா் மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு ரூ.1,16,06,600 மற்றும் 63 கிராம் தங்க காசு, புவனகிரி துரைசாமி மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு ரூ.60,93,500, கடலூா் வண்டிபாளையம் வைத்தியலிங்கம் மூலம் சீட்டு கட்டிய நபா்களுக்கு ரூ.99,60,000 மற்றும்15 கிராம் தங்க காசு கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம்.

இதுபோல பல நபா்களுக்கு பணம் மற்றும் அதற்கான பொருள்கள் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, அன்பரசு மற்றும் பாதிக்கப்பட்ட நபா்கள் சோ்ந்து செல்வநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எஸ்.ஜெயகுமாரிடம் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ஜெயசந்திரன் மற்றும் காவல் ஆய்வாளா் குருமூா்த்தி ஆகியோா் வழிகாட்டுதல் மற்றும் மேற்பாா்வையின் கீழ் காவல் உதவி ஆய்வாளா் லிடியா செல்வி , செல்வநாயகம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தாா்.

காவல்துறை விசாரணையில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபா்களிடம் பல கோடி பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க